இரண்டாம் நிலை கட்டுரை

தமிழ் கோவில்கள் ⭐

தமிழர்களின் கட்டிடக்கலைக்கு மாபெரும் சான்றாக இன்றும் நிலைத்து நிற்பவை கோவில்களே.

கோவில்கள் இன்றைய நாளில் வழிபாட்டுத் தலமாக இருந்தாலும், பண்டைய காலத்தில் இது மக்கள் கூடும் இடமாக, மருத்துவ கூடமாக, பேரிடர்கள் வரும்போது அடைக்கல இடமாக, கலை நிகழ்வுகளின் தளமாக எனப் பல்வேறு பயன்பாட்டிற்கும் இருந்துள்ளது.

கோவில்களின் கட்டமைப்பு பெரும் மதில் சுவர்களால் சூழப்பட்டிருக்கும், மையப்பகுதியில் வானுயிர கோபுரம் இருக்கும். அந்தக் கோபுரத்தின் உச்சிக்கு நேர் கீழாகக் கடவுளின் சிற்பமுள்ள கருவறை இருக்கும்.

கோவிலில் பல்வேறு கடவுள்கள் இருந்தாலும், கருவறையில் இருக்கும் கடவுளே, கோவிலின் மையக் கடவுளாக கருதப்படுவார்.

கோவிலில் இறைவனுக்கு பூசை செய்ய பூசாரிகள் இருப்பார்கள். மக்களின் பெயர் ராசி, நட்சத்திரங்களை கேட்டு இறைவனிடம் மக்களுக்காக அர்ச்சனை செய்வார்கள்.

கோவிலின் சுற்றுப்புற சுவரில் நான்கு பக்கமும் கதவுகள் இருக்கும். அதனை வடக்கு வாசல் கிழக்கு வாசல் தெற்கு வாசல் மேற்கு வாசல் என்று அழைப்பர்.

மதில் சுவருக்கும், கோவிலுக்கும் இடையே நடந்து செல்லும் பாதை இருக்கும். மக்கள் பொதுவாகக் கோவிலை மூன்று முறை இந்தப் பாதையில் சுற்றி வருவார்கள்.

கோவிலில் குளம் கிணறு போன்ற நீர்நிலைகளும் இருக்கும். ஒவ்வொரு கோயிலுக்கும் பெரும் தலை மரம் இருக்கும்.

பலிபீடம், கொடிமரம், மண்டபம், நந்தி சிலை போன்றவை கோவிலில் வாசல் வழியில் இருக்கும்.

மக்கள் தங்கள் காணிக்கையை இறைவனுக்கும் கோயிலுக்கும் கொடுக்க எல்லா கோவிலிலும் உண்டியல் இருக்கும்.

கோவிலுக்கு என்ற பெரிய தேர் இருக்கும் கோவில் திருவிழா காலங்களில் கருவறையில் இருக்கும் கடவுள் சிலையைத் தேரில் வைத்து ஊரைச் சுற்றி உலா வருவார்கள்.

கோவில்களில் பூசைக் காலங்களில் அடிக்கப் பெரிய ஆலயமணி நிறுவப்பட்டிருக்கும். இந்த மணியின் நாக்கோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒரு நீண்டக் கயிற்றை விட்டுவிட்டு இழுத்து, பூசைக் காலங்களில், மங்களகரமான ஒலியை எழுப்புவர்.