அடைமொழிகள் என்றால் என்ன?
ஒரு பெயர்ச்சொல்லின் அல்லது ஒரு வினைச்சொல்லின் பண்பை விளக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் சொற்கள் அடைமொழிகள் எனப்படும்.
பெயர் சொல்லின் பண்பை விளக்க அதனோடு இணைந்து வரும் சொல் பெயரடை எனப்படும்
அழகான சிறுமி |
புதுமையான பாடம் |
நல்ல பாடல் |
கேட்ட பழக்கம் |
நல்ல புத்தகம் |
விசாலமான மரம் |
சிறிய வீடு |
சிவந்த கண்கள் |
நல்ல புத்தகம் |
நீண்ட பயணம் |
அழகான கிளி |
இனிமையான பாடல் |
பண்புள்ள மாணவன் |
வினை சொல்லின் பண்பை விளக்க அதனோடு இணைந்து வரும் சொல் வினையடை எனப்படும்
உயரமாகப் பறந்தது |
கண்ணன் நிதானமாய்க் பேசினான். |
கண்ணன் மாலையில் வருவான். |
கமலா வேகமாக ஓடினாள். |
சட்டமாகச் சிரித்தார்கள் |
சிறுவன் கீழே விழுந்தான். |
சிறுவன் வேகமாக ஓடினான். |
தவறாகச் செய்தான் |
நான் நேற்று வந்தேன். |
வேகமாக ஓடினாள் |
ஆசிரியர் இனிமையாகப் பாடினார். |
ஆசிரியர் உள்ளே வந்தார். |
இவன் அடிக்கடி வருகிறான். |
குறிப்பு: மேலும் பின்வரும் நிலைகளில் வினையடைகள் வருதலும் உண்டு.
தனித்து அல்லது அடுக்கி வரும் ஒலிக்குறிப்பு சொற்களை அடுத்து \\\’என்று\\\’, \\\’என\\\’ என்னும் இடைச்சொற்கள் விகுதி பெறல்.
உதாரணம் : திடீரென்று, திடீர்திடீரென்று
காலம் உணர்த்தும் வினையடைகள்
உதாரணம் : நேற்று, இன்று, நாளை, மாலை, முன்னர்
இடம் உணர்த்தும் வினையடைகள்
உதாரணம் : அங்கே, இங்கே, உள்ளே, வெளியே
வினை எவ்வாறு நிகழ்ந்தது என்பதை உணர்த்தும் வினையடைகள்
உதாரணம் : வேகமாக, நிதானமாக, இனிமையாக
காலத் தொடர்ச்சி உணர்த்தும் வினையடைகள்
உதாரணம் : அடிக்கடி, தினமும், திடீரென்று
அளவு உணர்த்தும் வினையடைகள்
உதாரணம் : நிறைய, ஏராளமாக, கொஞ்சமாக