இலக்கணம் கட்டுரை

வினைச்சொல்

வினைச்சொல் – ஒரு பொருளின் செயலைக் குறிக்கும் சொல்லுக்கு வினைச்சொல் என்று பெயர்.

(எ.கா.) அம்மா  அழைக்கிறாள், பாப்பா  வருகிறாள், நிலம்  அதிர்ந்தது, நீர்  ஓடுகிறது, அலை வருகிறது

தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது.

பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது.

தன்வினை

பிறவினை

வருந்துவான்

வருந்துவான்

திருந்தினான்

திருத்தினான்

அடங்கினான்

அடக்கினான்

ஆடினான்

ஆட்டினான்

மாறுவான்

மாற்றுவான்

செய்வினை – செயப்பாட்டுவினை

செய்வினை  செயப்பாட்டுவினை
ஆசிரியர் புத்தகத்தை எழுதினார் புத்தகம் ஆசிரியரால் எழுதப்பட்டது
ஆசிரியர் மாணவர்களுக்குக் கற்பித்தார் மாணவர்கள் ஆசிரியரால் கற்பிக்கப்பட்டனர்
உழவன் நிலத்தை உழுதான் நிலம் உழவனால் உழப்பட்டது
கன்று பால் குடித்தது பால் கன்றால் குடிக்கப்பட்டது
தம்பி பேனையை எடுத்தான் பேனை தம்பியால் எடுக்கப்பட்டது
நான் மாம்பழத்தை உண்டேன் மாம்பழம் என்னால் உண்ணப்பட்டது
பசுப் புல் மேய்ந்தது புல் பசுவால் மேயப்பட்டது

உடன்பாட்டுவினை – எதிர்மறைவினை

உடன்பாடு
+ம்
எதிர்மறை
+ஆது
ஆடும் ஆடாது
ஓடும் ஓடாது
பாடும் பாடாது
சுடும் சுடாது
குளிரும் குளிராது

முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். (எ.கா.) வந்தான், 

முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் எனப்படும். (எ.கா.)  வந்த பையன், உண்ட குதிரை, ஓடி வந்தது

வந்தான் – வினைமுற்று
வந்த மாணவன் – பெயரெச்சம்
வந்து விழுந்தான் – வினையெச்சம்