பாடநூல் பாடங்கள் கட்டுரை

கவியின்பம்

படிப்போர் மனங்களை ஈர்ப்பவை கவிதைகள். அவற்றின் ஓசை நயம், பொருட்செறிவு என்பன மனத்திற்கு இன்பம் தருபவை. உள்ளத்து உணர்ச்சிகளைச் சொற்களால் இணைத்து, புனைவுகளால் அழகு சேர்த்துச் செவிக்கின்பம் ஊட்டும் வகையில் கவிதை எழுதுபவர் கவிஞர். இவர்கள் தம் கவித்திறனால் இயற்கைக் காட்சிகளையும் படிப்போர் மனக்கண் முன் கொண்டுவருவர். திறன் படைத்த கவிதைகள் சுவைப்போர் மனத்தை மயக்க வல்லன. கவிதை வாயிலாக வீரம், காதல், கொடை, நட்பு, இன்பதுன்ப உணர்ச்சிகள் என்பவற்றை வெளிப்படுத்தலாம். அவ்வாறான கவிதைகள் காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும். மக்களின் மனங்களைக் கவர்ந்த இனிய கவிதைகள் சிலவற்றை நாமும் படித்து இன்புறுவோம்.